By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 14 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருக்கும் விளாத்திகுளம் பேரூராட்சி பூங்கா பழுதான விளையாட்டு உபகரணங்களால் சிறுவர்கள் காயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > 14 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருக்கும் விளாத்திகுளம் பேரூராட்சி பூங்கா பழுதான விளையாட்டு உபகரணங்களால் சிறுவர்கள் காயம்
தமிழ்நாடுதூத்துக்குடி

14 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருக்கும் விளாத்திகுளம் பேரூராட்சி பூங்கா பழுதான விளையாட்டு உபகரணங்களால் சிறுவர்கள் காயம்

Last updated: July 10, 2026 1:05 pm
July 10, 2026
13 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஜூலை 10 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு சார்பில் அம்பாள் நகர் முத்து பூங்கா பல ஏக்கர் பரப்பளவில், சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டு உபகரணங்கள், நடைபயிற்சி மேடை, கழிவறை வசதி அமைக்கப்பட்டது.

இந்தப் பூங்காவிற்கு விளாத்திகுளம் பேரூராட்சி பகுதியில் உள்ள 10,000 மேற்பட்ட மக்கள் மற்றும் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிறுவர்கள் குழந்தைகள் என விடுமுறை தினங்களை பூங்காவில் வந்து நேரத்தை செலவிடுவதை வழக்கமாக வைத்து வருகின்றனர்.

அவ்வாறு பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், பல ஆண்டுகளாக பழுதாகி உடைந்த நிலையில் தற்போது வரை அதை சரி செய்யாமல் இருப்பதால், விளையாட்டு உபகரணங்களில் விளையாடக்கூடிய சிறுவர்களுக்கு அடிக்கடி கை, கால்களில் விபத்து ஏற்பட்டு காயம் ஏற்பட்டு வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விளாத்திகுளத்தை சேர்ந்த ஒரு சிறுவன் எதிர்பாராத விதமாக மின்கம்பியை தொட்ட போது, மின்சாரம் தாக்கி பூங்காவிலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கதாகும். பூங்காவின் பராமரிப்பிற்காக மாதம் விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பணம் எடுப்பதாகவும் அவ்வாறு எடுக்கப்படும் பணம் முறையாக பூங்க பராமரிப்பிற்கு செலவிடப்படவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் பூங்கா வளாகத்தில் மின்கம்பங்களை தொடாதீர்கள் என்று அறிவிப்பு பலகை ஒட்டப்பட்டுள்ளது. பூங்கா வளாக வெளிப்பகுதியில் இருந்த ஆழ்துளை அடி பம்பை அகற்றி அதற்கு மாற்றாக மின்சார பம்பு அமைக்கப்பட்டுள்ளது. அந்த மின்சாரபம்பு எதற்கு அமைக்கப்பட்டுள்ளது? என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள கழிவறைகள் வெறும் காட்சிப் பொருளாகவே வைக்கப்பட்டுள்ளது தவிர, கழிவறையை பராமரிப்பதற்கு நேரமில்லாத காரணத்தினால் கழிவறையை காட்சிப் பொருளாகவே மட்டும் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

எனவே சிறுவர்கள் மற்றும் பொதுமக்களின் உயிரை பாதுகாக்கும் வகையில் 14 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருக்கும் இந்த பூங்காவை முறையாக பராமரிக்க வேண்டும் என்று விளாத்திகுளம் பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் சாதனை
நாகர்கோவில் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி: காயத்துடன் பல மணி நேரம் தண்டவாளத்தில் கிடந்தவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்
செங்கம் ஶ்ரீ ராமகிருஷ்ணா மடம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 12ம் வகுப்பு பொது தேர்வில் கார்த்திக் ராஜா சாதனை
கள்ளக்காதல் விவகாரம்: மனைவி கள்ளக்காதலனை தாக்கிய கணவர் கைது
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புகையிலை எதிர்ப்பு தினம் உறுதிமொழி ஏற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

காமராஜர் புகழுக்கு களங்கம்; திருச்சி சிவாவின் கட்சி பதவியை பறிக்க வேண்டும்; அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்

July 18, 2025
297 Views
ஆதாய கொலை இந்த ஆண்டு இல்லை; பொது இட குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளது!!
தேசிய அஞ்சல் வார தின விழா
முன்னாள் முதல்வர் கலைஞரின் 101 வது பிறந்த நாள் விழா
இந்தியன் வங்கி மார்ச் 25-ஜூன் 25ல் முடிவடைந்த காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியீடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account