திருமலாபுரம் புனித லூர்து அன்னை திருத்தலத்தில் 112 ம் ஆண்டு திருவிழா
பாளை மறை மாவட்டம் சேர்ந்தமரம் பங்கு, திருமலாபுரம் புனித லூர்து அன்னை திருத்தலத்தில் 112 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு திருப்பலி நிகழ்ச்சியும் , அதனைத் தொடர்ந்து தேர் பவனியும் நடந்தது. பங்குத்தந்தை ஜெகன் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டார். தொடர்ந்து 112 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு திருப்பலி நிகழ்ச்சி, தேர் பவனி மற்றும் சர்வ சமய சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேலநீலிதநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், திருத்தல வளர்ச்சி பணிக்குழுவை சேர்ந்த பொறுப்பாளர்கள் அந்தோணிசாமி, சேசுராஜ் லூர்துவியாகப்பன், மரியதாசன், பிரான்சிஸ், சேவியர், ராஜன், லூர்துவியாகப்பன் மற்றும் திமுக ஒன்றிய கழக நிர்வாகிகள் கிளை செயலாளர் முருகன், மணி, வைரமுத்து. ராஜேந்திரன், சிற்றரசு, நிரஞ்சன், மற்றும் அருட்தந்தையர்கள், பல்வேறு கிராமத்திலிருந்து அனைத்து சமயத்தை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருவிழா பணிக்குழு பொறுப்பாளர்கள் திருமலாபுரம் ஊர் தலைவர் சூசைஆரோன், பிரான்சிஸ் சேவியர், மிக்கேல்ராஜ், சார்லஸ், தங்கசாமி, புஷ்பராஜ், ஆரோக்கியசேவியர் மற்றும் லூர்து அன்னை இளையோர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் செய்து இருந்தனர்.