தக்கலை, மார்ச் -1
தக்கலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காதலன் மாணவியை சந்திக்க அவரது வீட்டு பகுதிக்கு வந்துள்ளார். இதனை அப்பகுதி இளைஞர்கள் கண்டித்து காதலனை துரத்தி விட்டனர்.
இதனால் மன வருத்தம் அடைந்த மாணவி விஷத்தை குடித்துள்ளார். இதில் வாயில் நுரை தள்ளியபடி போராடிய மாணவியை அவர் தாயார் கண்டு, உடனடியாக உறவினர்கள் துணையுடன் தக்கலை அரசு மருத்துவமனையில் மாணவியை சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன


