மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலர் ச.கிருஷ்ணன் முன்னிலையில் இத்திருக்கோயில் மற்றும் 10 உபகோயில்களின் நிரந்தர உண்டியல்கள், 5 திருக்கோயில்களின் அன்னதான உண்டியல்கள் திறப்பு நடைபெற்றது. உண்டியல் திறப்பின்போது திருக்கோயில் அறங்காவலர்குழுத் தலைவர் அவரது பிரதிநிதி. திருக்கோயில் அறங்காவலர்கள், மதுரை, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர், திருக்கோயில் கண்காணிப்பாளர்கள், மதுரை (தெற்கு) மற்றும் கள்ளிக்குடி சரக ஆய்வர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டார்கள். இத்திருக்கோயில்
உண்டியல் திறப்பின் பொழுது ரொக்கம் ரூ.125,91921/- (ரூபாய் ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சத்து தொண்ணூற்றி ஓராயிரத்து தொள்ளாயிரத்து இருபத்து ஒன்று மட்டும்), பலமாற்று பொன் இனங்கள் 482 கிராம், பலமாற்று வெள்ளி இனங்கள் 846 கிராம் மற்றும் அயல் நாட்டு நோட்டுக்கள் 260 எண்ணம்
கோவில் உண்டியலில் காணிக்கையாக கிடைக்க பெற்றுள்ளன.