வேலூர்_12
வேலூர் மாவட்டம், வேலூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கணியம்பாடி, அன்னை நகர் பகுதியில் கடந்த 07.09.2024-ம் தேதி சோடியா என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த பணம், நகைகள் திருடப்பட்டதாக வேலூர் கிராமிய காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணன் உத்தரவின் பேரில் வேலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிருத்திவிராஜ் சவுகான் வழிக்காட்டுதலின்படி வேலூர் கிராமிய வட்ட காவல் ஆய்வாளர் திருமதி.சுபா மற்றும் வேலூர் கிராமிய காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிலம்பரசன் ஆகியோரின் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு இன்று 10.09.2024-ம் தேதி எதிரிகள் 1. ராஜாமணி வ/28, த/பெ முருகன், வரகூர் புதூர், இராணிப்பேட்டை, 2.சாதிக் பாஷா (எ) இம்மானுவேல், வ/54 த/பெ நவாப் ஜான், காரை, இராணிப்பேட்டை, என்பவர்கள் கைது செய்து
எதிரிகளிடமிருந்து 03 சவரன் தங்க செயின், ஒரு சவரன் கம்பல் மாடல் ஒரு ஜோடி, வெள்ளி கால் கொலுசு இரண்டு ஜோடி, மற்றும் ரொக்க பணம் ரூபாய் 10,000/- ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, எதிரிளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது