வேலூர், நவ. 28 –
வேலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2025-26 ஆம் ஆண்டில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்திற்கான தேர்வு 14.12.2025 நடைபெறுவதை ஒட்டி வேலூர் நகரம், வேலூர் புறநகர், காட்பாடி மற்றும் கணியம்பாடி ஒன்றியத்திலுள்ள எழுத்தறிவு மையங்களில் பணிபுரியும் 160 தன்னார்வலர்களுக்கு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக, இணை இயக்குநர் பொன் குமார் கலந்து கொண்டு தன்னார்வலர்களுக்கு தேர்வு பற்றிய ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கி கலந்து உரையாடினார்.
இந்நிகழ்வில் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் கே.எம். ஜோதீஸ்வரபிள்ளை வரவேற்றார். முதன்மைக் கல்வி அலுவலர் ர. பிரேமலதா அவர்கள் தன்னார்வலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், வட்டார அளவிலான ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் சிறப்பு எழுத்தறிவுத் திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்டத்திலுள்ள ஆண்கள் சிறையில் 72 சிறைவாசிகளுக்கும் பெண்கள் சிறையில் 19 சிறைவாசிகளுக்கும் சிறப்பு எழுத்தறிவுத் திட்டத்தின் மூலமாக வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு செயல்படும் மையத்தில் 6 தன்னார்வலர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பகல் 12 மணி அளவில் அணைக்கட்டு குடியாத்தம் கே வி குப்பம் ஆகிய ஒன்றியங்களில் இருந்து 110 தன்னார்வலர்கள் பள்ளிகொண்டா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் ராஜன் காட்பாடியிலும் பள்ளிகொண்டாவில் குடியாத்தம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் வெண்ணிலா ஆகியோர் செய்து இருந்தனர்.



