வேலூர், செப். 13 –
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில் வாகனன் காணாமல் மற்றும் களவு போனவைகளில் மீட்கப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள 250 செல் போன் களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். செல்போன் உரிமையாளர்களும் அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுகொண்டனர்.
மக்களிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் பேசுகையில்: காணாமல் போன மற்றும் களவு போன செல்போன்களை இன்று 250 செல்போன்கள் ரூ.50 லட்சம் மதிப்புள்ளவைகள் உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளோம். இதுவரையில் 2 ஆயிரம் செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளோம். மக்கள் பல முக்கிய ஆவணங்கள், தங்கள் சுய விவரங்கள், வங்கி விவரங்களை செல்போன்களில் பராமரித்து வைப்பது வழக்கம். அதனை நீங்கள் பாதுகாப்பாக வைத்துகொள்ள வேண்டும். களவு போனால் உடனடியாக காவல் நிலையங்களில் புகார் அளித்தால் உங்கள் செல்போனை கண்டுபிடித்து உங்களிடம் ஒப்படைப்போம் என பேசினார்.



