விளாத்திகுளம், ஆகஸ்ட் 15 –
இந்திய திருநாட்டின் 79- சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், க. குமரெட்டையாபுரம் ஊராட்சி, அ. வேலாயுதபுரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அவர்கள் கலந்து கொண்டு கிராமத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரஞ்சித், விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் சித்துராஜ், திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், சின்னமாரிமுத்து, இம்மானுவேல், பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், கிளை செயலாளர்கள் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



