விளாத்திகுளம், ஆகஸ்ட் 12 –
வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்ததை தொடர்ந்து விளாத்திகுளம் எட்டையபுரம் சாலையில் அமைந்துள்ள நியாய விலைக்கடையில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தொடங்கி வைத்து பயனாளிகளின் இல்லத்திற்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில் கூட்டுறவு சார் பதிவாளர்கள் மகேஸ்வரன், முருகலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் செல்வலட்சுமி, கூட்டுறவு பண்டகசாலை மேலாளர் சுபாஷ், விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், விளாத்திகுளம் தொகுதி திமுக ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, சின்னமாரி முத்து, அன்புராஜன், இம்மானுவேல், ராதா கிருஷ்ணன், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி, வார்டு செயலாளர்கள் உட்பட கழக நிர்வாகிகள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



