வேலூர், செப். 20 –
வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ. விசுவநாதன் பேத்தி காதம்பரி எஸ். விசுவநாதன் – ஏ.ஷ்ரவன் கிருஷ்ணா திருமண வரவேற்பு விழா நேற்று (செப்.19) நடைபெற்றது. வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் பேத்தியும், துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் -ரமணி பாலசுந்தரத்தின் மகளும், விஐடி உதவி துணைத்தலைவருமான காதம்பரி எஸ்.விசுவநாதன் – டாக்டர் ஏ.ஷ்ரவன் கிருஷ்ணா ஆகியோரின் திருமணம் திருப்பதியில் கடந்த வாரம் நடந்தது.
அதைத்தொடர்ந்து, விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் காதம்பரி எஸ.விசுவநாதன்- ஏ.ஷ்ரவன் கிருஷ்ணா திருமண வரவேற்பு விழா நேற்று நடந்தது. விஐடி வேந்தர் கோ. விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் தமிழக அமைச்சர்கள் எ.வ. வேலு, ஆர். காந்தி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.பி. கதிர் ஆனந்த், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, எம்எல்ஏ-க்கள் நந்தகுமார் கார்த்திகேயன் ஈஸ்வரப்பன், அமலு, சரவணன், ரவி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி மற்றும் புதுச்சேரி எம்எல்ஏ சிவா, புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து, முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன், சித்தூர் முன்னாள் எம்எல்ஏ வெங்கடேஸ்வரா சவுத்ரி, அதிமுக மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர்.கே. அப்பு, வேலழகன், சுகுமார், அமமுக மாவட்டச் செயலாளர் பார்த்திபன், மற்றும் பாரதிதாசன் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் கோ.பாரதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மேலும் மியான்மர் கல்வி துறை துணை அமைச்சர் ஜா மின்ட், சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் துணை ஆணையர் கணேசநாதன் கதீஸ்வரன் மற்றும் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டனர். வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், மேயர் சுஜாதா, இஸ்ரோ விஞ்ஞானி எஸ்.புருஷோத்தமன், தி ஜிகே சர்வதேச பள்ளி நிர்வாக இயக்குனர் வினோத் காந்தி மற்றும் தொழிலதிபர்கள், முக்கிய உறவினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமண வரவேற்பு நிகழ்வில் விஐடி பல்கலைக்கழக துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன்-ரமணி பாலசுந்தரம், சேகர் விசுவநாதன்-சந்தியா பென்டரெட்டி, ஜி.வி.செல்வம்- அனுஷா செல்வம் உள்ளிட்டோர் விருந்தினரை வரவேற்று உபசரித்தனர். உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், திருமண வரவேற்பு விழாவையொட்டி வாழ்த்து மடல் அனுப்பி மணமக்களை வாழ்த்தியுள்ளார்.



