நாகர்கோவில், ஏப். 20 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மண்டல வாரியாகப் பிரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதை கலெக்டர் அழகுமீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குறிப்பாக அழியாத மை, படிவங்கள், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான கையேடுகள், கைப்பேசி பாதுகாப்பு உறை, தீப்பெட்டி, பசை, ரப்பர் முத்திரை, மெழுகுவர்த்தி, ஸ்டாம்ப்பேட் மற்றும் இதர எழுதுபொருட்கள் முறையாகப் பிரிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளுக்கு இந்தப் பொருட்களைச் சரியான நேரத்தில் கொண்டு சேர்ப்பதற்கான வாகன வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அந்தந்த சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. தேர்தல் பணிகளில் எந்தவிதத் தொய்வும் இன்றி, விதிமுறைகளை முறையாகப் பின்பற்றிச் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
நடைபெற்ற ஆய்வில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் புஷ்பாதேவி, உதவி சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்கள், பணியாளர்கள்உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.



