இராமேஸ்வரம், ஜுலை 25 –
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கடந்த மாதம் பக்தர்களால் அளிக்கப்பட்ட காணிக்கை உண்டியல் எண்ணும் பணி கோயில் இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் திறக்கப்பட்டு எண்ணிக்கை தொடங்கியது. மாலை வரை கணக்கெடுக்கப்பட்டது. அந்த வகையில் கிடைக்கப் பெற்ற ரூபாய் ஒரு 1 கோடியே 14 லட்சத்தி 65 ஆயிரத்து 707 மற்றும் தங்கம் 61 கிராம் வெள்ளி 3 கிலோ 200 கிராம் மற்றும் அயல்நாட்டு நோட்டுகள் 51 காணிக்கை அளிக்கப்பட்டுள்ளதாக இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
உண்டியல் எண்ணும் பணியில் சிவகங்கை மண்டல இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் தக்காரான சிவகங்கை மண்டல இணை ஆணையரின் பிரதிநிதி ராமநாதபுரம் முதுகுளத்தூர் ஆய்வர்கள், உதவி ஆணையர் ரவீந்திரன், செயல் அலுவலர் முத்துச்சாமி, மேலாளர் வெங்கடேசன், பேஷ்கார்கள் கமல்நாதன், பஞ்சமூர்த்தி, நாகராஜன், முனியசாமி, உழவாரப்பணி ஆன்மீக குழுவினர் வங்கி பணியாளர்கள் கல்லூரி மாணவிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.