ராமநாதபுரம், ஜுன் 26 –
ராமநாதபுரம் தெற்கு நகர திமுக இளைஞர் அணி சார்பில் தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் 102 வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் பிள்ளையார் கோவில் ஸ்டாப்பில் நடைபெற்றது.
திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டத்தில் இளைஞர் அணி அமைப்பாளர் கோபிநாதன் அய்யாவு தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ் கண்ணா வரவேற்புரை ஆற்றினார். ராமநாதபுரம் தெற்கு நகர் கழகச் செயலாளர் நகராட்சி துணை சேர்மன் பிரவீன் தங்கம், ராமநாதபுரம் வடக்கு நகர் செயலாளர் நகராட்சி சேர்மன் கார்மேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக இளம் பேச்சாளர் காயத்ரி சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு நான்காண்டு சாதனை குறித்து விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில் இளைஞர் அணி மாநில செயலாளர் ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, மாநில விவசாய அணி துணைச் செயலாளர் குணசேகரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் செந்தில்குமார், ஜெய ரகுநாத சேதுபதி, சரவணக்குமார், சம்சுதீன், அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இளைஞர் அணி துணை அமைப்பாளர் சதீஷ் சர்மா நன்றி கூறினார். தெற்கு நகர் கழக இளைஞர் அணிகள் திரளாக கலந்து கொண்டனர்.