நாகர்கோவில், மே 11 –
நாகர்கோவில் அடுத்த ராஜாக்கமங்கலம் துறை பகுதியை சேர்ந்தவர் லெக்கின் தாஸ் (27). இவர் நாகர்கோவில் வல்லன்குமாரன் விளையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். கடந்த 9ம் தேதி இவரும் நண்பர்கள் ரூபன், ரிக்கில் ஆகியோர் தர்மபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றனர். அப்போது அந்த ஓட்டலில் சிக்கன் 65 கேட்டுள்ளனர். அப்போது ஓட்டல் ஊழியர் சிக்கன் 65 வைத்துள்ளார். இதில் சிக்கன் பீஸ் குறைவாக இருந்துள்ளது. ஏன் பீஸ் குறைவாக உள்ளது என லெக்கின் தாஸ் கேட்டுள்ளார்.
இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஹோட்டல் ஊழியர் உரிமையாளர் தியாகராஜன் (65) என்பவருக்கு போன் செய்துள்ளார். அவர் நடத்தில் பேச்சுவார்த்தையில் தகராறு அதிகரித்தது. அப்போது லெக்கின் தாசை கல்லால் தாக்கி தலையில் காயம் ஏற்படுத்தி உள்ளனர். காயமடைந்தவரை குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் ராஜாகமங்கலம் போலீசார் ஓட்டல் ஊழியர் ஐயப்பன் (45), ஹோட்டல் உரிமையாளர் தியாகராஜன் (65) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.


