சங்கரன்கோவில், ஜூன் 10 –
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நடுவக்குறிச்சி மைனர், நடுவக்குறிச்சி மேஜர், பட்டாடை கட்டி, கோ மருதபுரம் ஆகிய நான்கு வருவாய் கிராமங்களுக்கு கிராம சபைக்கு வழங்கப்பட்ட 900 ஏக்கர் நிலங்கள் மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. 45 ஆண்டுகள் கழித்து விவசாயிகள் பயன்பாட்டிற்கு தமிழக அரசு வழங்கியதால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்து மீண்டும் நிலங்கள் வழங்கிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் விவசாயிகளின் கோரிக்கையை முதல்வர் அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று கிராம மக்கள் விவசாயிகளுக்கு நிலம் கிடைக்க அனுமதி பெற்று தந்த மாவட்டச் செயலாளர் ராஜா எம் எல் ஏ, தமிழ்நாடு சர்வோதயா மண்டல மாவட்ட செயலாளர் வெள்ளத்துரை சுப்ரமணியன் ஆகியோர்களுக்கு பொதுமக்கள் சார்பில் நடுவக்குறிச்சியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சர் சா.தங்கவேலு, ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கர பாண்டியன், ராமச்சந்திரன் மாவட்டப் பொருளாளர் சரவணன், மதிமுக மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட அவைத்தலைவர் சுப்பையா, கிளைச் செயலாளர் சங்கர் சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் விவசாய அணி அமைப்பாளர் சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.