மார்த்தாண்டம், ஜூன் 30 –
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட தையாலுமூடு சோதனைச்சாவடி – கிழங்குவிளை – வேளார்குடி (முப்பந்திகோணம்) சாலை, கோழிவிளை ஏலூர்காடு ஆகிய இரண்டு சாலைகளையும் சீரமைத்து பல வருடங்கள் ஆகியதாலும் கடந்த 12-11-2021 அன்று ஏற்பட்ட புயல் மற்றும் பெரு கனமழையினாலும் சாலைகளின் பக்கச்சுவர்கள் இடிந்து விழுந்தும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது.
இதனால் பழுதடைந்த இந்த சாலைகளை உடனடியாக முன்னுரிமை வழங்கி சீரமைக்க வேண்டும் என்று கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அதிகாரிகளிடமும் தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் சாலை சீரமைக்க சீரமைக்க மொத்தம் ரூ.84.50 லட்சம் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் (MGSMT) கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து நேற்று தையாலுமூடு சோதனைச்சாவடி – கிழங்குவிளை வேளார்குடி (முப்பந்திகோணம்) சாலை, கோழிவிளை ஏலூர்காடு ஆகிய இரண்டு சாலைகளையும் சீரமைக்கும் பணிகளை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முஞ்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜய குமார், மெதுகும்மல் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வராஜ், மெதுகும்மல் ஊராட்சி கிளை காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ஷாஜி, பிரமில் பேலிஸ், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் லூயிஸ், ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் வினிஸ், சாந்தினி, காங்கிரஸ் ஓபிசி பிரிவு மாவட்ட தலைவர் ஸ்வர்ட், முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராஜேஸ்வரி, நிர்வாகிகள் ஸ்டீபன், பகவத், சபரி குமார், ராஜேஷ், விஜின் முன்சிறை வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜின் குமார், கிள்ளியூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் விஜின் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.