முதுகுளத்தூர், ஜூன் 26 –
முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழாவில் 40.20 லட்சம் மதிப்பீட்டில் இலவசமாக 42 வீட்டு மனைகள் 5 பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட துணை ஆணையர் (ஆயம்) கங்கா தேவி தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. முதுகுளத்தூர் தாசில்தார் முன்னிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய் கணக்குகளை சமர்பித்தனர். கிராம கணக்குகளை ஆய்வுசெய்த மாவட்ட துணை ஆணையர் (ஆயம்) 31 பட்டா மாறுதல்களுக்கு உத்தரவிட்டார்.
ஜமா பந்தியில் நலிந்தோர் உதவி திட்ட தாசில்தார் மரகத மேரி, மண்டல துணை தாசில்தார்கள் ராமர், தமிழ்மதி, தலைமை இடத்து தாசில்தார் விஜயா, வருவாய் ஆய்வாளர் தினேஷ், சர்வேயர் ஸ்டீபன், கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் மணிமூர்த்தி, அன்புக்கண்ணன், தனவேந்தன் உள்பட கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.



