கிருஷ்ணகிரி, செப். 10 –
கிருஷ்ணகிரி மாவட்டதில் 11 மற்றும் 12 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ள ஓசூர், கிருஷ்ணகிரி நகரம். கிருஷ்ணகிரி மாவட்டதில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வரும் தமிழ்நாடு முதலமைச்சர்.
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை கல்லூரி மைதானத்தில் பல்வேறு நல திட்டங்கள் பொதுமக்களுக்கு வழங்கும் விழா மற்றும் குருபரபள்ளி சிப்காட் டெல்டா நிறுவனத்தின் இரண்டாவது யூனிட் துவக்கி வைக்க வருகை தரும் முதலமைச்சர் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி முதல் காந்திநகர் மாவட்ட செயலாளர் மதியழகன் இல்லம் வரை ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி கடந்த பத்து நாட்களாக முகாமிட்டு ஏற்பாடுகளை செய்து வருகிறார். கிருஷ்ணகிரியில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் மதியழகன் ஏற்பாடுகளை தீவிரமாக செய்துவருகின்றனர்.
திமுக மாவட்ட செயலாளர் மதியழகன் 5 லட்சம் தொண்டர்களை திரட்ட வேண்டும் என தீவிரமான வேலையை செய்து வருகிறார். மாவட்ட நிர்வாகமும் கிருஷ்ணகிரியை அழகுபடுத்தி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை கிருஷ்ணகிரி மாவட்டதில் பல்வேறு தொழில் துறை, தொழில்கள், வேலைவாய்ப்பு பெருகும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு.



