திருச்சி, ஜூன் 8 –
திருச்சி மாவட்டம், முசிறியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் பங்காரு அடிகளாரின் 86வது அவதார திருநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் சமுதாயப் பணிகள் விழா நடைபெற்றது.
முசிறி சித்தர் வழிபாட்டு மன்றத்தில் நடைபெற்ற இந்த விழாவில், 9 பயனாளிகளுக்கு கண்புரை அறுவை சிகிச்சைக்காக ரூ.27 ஆயிரம், 24 பயனாளிகளுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள இலவச கண்ணாடிகள் மற்றும் முசிறி நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 100 பேருக்கு ரூ.35 ஆயிரம் மதிப்பில் வேட்டி சேலைகள் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சங்கத்தின் துணைத் தலைவர் மதியழகன் தலைமை வகித்தார்.



