களியக்காவிளை, மே 18 –
களியக்காவிளை, மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்பின் (38). இவர் நேற்று களியக்காவிளை காவல் நிலையத்திற்கு சென்றார். அப்போது அங்கு போலீஸ் வனிதா (35) என்பவர் பணியில் இருந்தார். அவரிடம் தன் மீது உள்ள வழக்குகளை முடித்து தர வேண்டும் என கேட்டு ஜோஸ்பின் தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு வனிதா உயர் அதிகாரிகள் வந்தபின் கேளுங்கள். என்னால் எதுவும் செய்ய முடியாது என கூறியுள்ளார்.
அப்போது ஜோஸ்பின் மேலும் தொடர்ந்து தகராறு செய்து கொண்டு இருந்ததால், காவல் நிலையத்திலிருந்து வெளியே செல்லுங்கள் எனக்கூறி ஜோஸ்பினை பெண் போலீஸ் வனிதா வெளியேற்ற முயற்சித்தார். அப்போது ஜோஸ்பின் வைத்திருந்த கிளிப்பால் வனிதா கையை கிழித்ததாக கூறப்படுகிறது. இதில் வனிதா காயமடைந்தார். பின்னர் அங்கிருந்த நாற்காலிகளை கீழே தள்ளிய ஜோஸ்பின், கொலை மிரட்டல் கொடுத்து விட்டு சென்றுள்ளார். இது குறித்து வனிதா களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


