கிருஷ்ணகிரி, 17.08.2026
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்து, அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமில், கால் துண்டிக்கப்பட்ட 2 மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.49,600 மதிப்பிலான செயற்கை கால்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் வழங்கினார். நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



