மார்த்தாண்டம், ஜூன் 28 –
மார்த்தாண்டம் தேனம்பாறை பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (35). இவரது மனைவி ஜாஸ்மின் (25). இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில் நேற்று ஜெகன் தனது மகளை பார்ப்பதற்காக மனைவி ஜாஸ்மின் தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த ஜாஸ்மின் மற்றும் ஜாஸ்பின், மெர்லின், ஐஸ்வர்யா, விமலா சாந்தி ஆகிய பெண்கள் சேர்ந்து ஜெகனை தடுத்து கடுமையாக தாக்கியுள்ளனர். காயமடைந்த ஜெகன் குழித்துறை அரசு மருத்துவமனையில் உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் 4 பெண்கள் மீதும் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.