மார்த்தாண்டம், ஆக. 29 –
மார்த்தாண்டம் அருகே கார் பைக் மோதி விபத்து ஏற்பட்டதில் கணவன் மனைவி படுகாயம் அடைந்தனர். செறுவல்லூர் வண்ணான்விளையை சேர்ந்த பிரான்சீஸ் (48). இவர் தனது மனைவியுடன் செம்மங்காலை பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது கோட்டவிளை பகுதியைச் சேர்ந்த முருகவேல் (23)
காரில் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்து பிரான்சீஸ் பைக் மீது மோதியது.
பிரான்சீஸ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரையும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் முருகவேல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


