நாகர்கோவில், மார்ச் 4 –
கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் மார்ச் 18- ல் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் என தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய அஞ்சல் துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் 18.03.2026 அன்று 10.30 மணியளவில் நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
அஞ்சல்துறை சேவையில் ஏதேனும் குறைகள் இருப்பின் பொதுமக்கள் அதனை இக்கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம் (அல்லது) தங்கள் குறைகளை தபால் மூலமாக அனைத்து விவரங்கள் மற்றும் ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பலாம். தபால் உறையின் மீது முன்பக்க மேல்பகுதியில் ‘தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் – மார்ச் 2026’ என்று தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும். புகார் மனுக்கள் வந்து சேரவேண்டிய கடைசிநாள் 11.03.2026 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



