மயிலாடுதுறை, செப். 17 –
மயிலாடுதுறை அடுத்த மாதிரிமங்கலத்தில் பெரியார் 147 வந்து பிறந்த தினமான இன்று இடம் மாற்றி அமைக்கப்பட்டு பெரியார் சிலை திறந்து வைக்கப்பட்டது. குத்தாலம் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சாமி செல்வம் தலைமையில் குத்தாலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் குமரா வைத்தியநாதன் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான குத்தாலம் கல்யாணம் கலந்து கொண்டு பெரியார் சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பெரியார் திராவிட கழகத்தினர் குத்தாலம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், குத்தாலம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சம்சுதீன் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் உறுப்பினர்கள், இளைஞரணியினர், மாணவரணியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோன்று குத்தாலம் கடைவீதியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.



