மதுரை, ஆகஸ்ட் 21 –
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 ல் தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று
மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே. பிரவீன் குமார் தலைமையில் மேயர் இந்திராணி பொன்வசந்த் முன்னிலையில் தைக்கால் தெரு பகுதியில் மத்திய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்கட்டிடம், தைக்கால் 1-வது தெருவில் ரூ.4.99 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு சின்டெக்ஸ் தொட்டி, வார்டு எண் 50 ஆதிமூலம் பிள்ளை பள்ளி வளாகத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தையும் மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வின் போது மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், மாமன்ற உறுப்பினர் இந்திராகாந்தி உட்பட மாநகராட்சி மற்றம் துறை சார்ந்த அலுவலர்கள் பலர்
கலந்து கொண்டனர்.



