மதுரை மே 3,
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை துணைவேந்தராக இருந்த குமார் பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி ஆளுநருக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதை ஆளுநர் ஏற்காமல் ராஜினாமாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக குமார் பொறுப்பேற்ற பின் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன 136 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர் மேலும் நிதி நிலை காரணம் காட்டி இரண்டு மாதத்திற்கு ஒருமுறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது மற்றும் பல்வேறு காரணங்களுக்காக துணைவேந்தர் பதவியில் இருந்து குமார் விலகுவதாக கூறப்படுகிறது.



