மதுரை, ஜூன் 23 –
மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு உடற்கல்வித்துறை, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், பசுமைப் படை, சாரணர் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு பள்ளித் தலைமையாசிரியர் ஷேக் நபி யோகாசன பயிற்சியின் நன்மைகளை எடுத்துரைத்தார். அப்போது பள்ளி உதவித் தலைமையாசிரியர் ஜாகீர் உசேன், ஆசிரியர்கள் தமிழ்க்குமரன், அல்ஹாஜ் முகமது, ஷெரீப் அலி மற்றும் செய்யது முகமது யூசுப் ஆகியோர் உடனிருந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் அமித், உடற்கல்வி ஆசிரியர்கள் காதர், மன்சூர் ஆகியோர் செய்திருந்தனர்.