தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரக்கூடிய நிலையில் மதுரை சிம்மக்கல் சிக்னலில் நிறுத்தத்தில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பேரில் 50 அடிநீளத்திற்கு தற்காலிக மேற்கூரை(greenscreen) அமைக்கப்பட்டுள்ளது அமைக்கப்பட்டுள்ளதுஇதேபோல் மதுரை மாநகராட்சி மண்டலம் 3 சேதுபதி மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள சிக்னலில் வாகன ஓட்டிகளுக்கு வெப்பம் தணிக்கும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மதுரையில் தொடர்ந்து வெப்பம் 42 டிகிரி செல்சியஸ் ஆக இருந்து வருகிறது. கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகளிடம் வரவேற்பு பெற்றுள்ளது.



