திருச்சி,
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதியில் கள் இறக்கியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட பொய்வழக்கை திரும்பப் பெறவும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவும் வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி மற்றும் கள் விடுதலை இயக்கத்தினர் சமயபுரம் காவல் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் திருச்சிராப்பள்ளி, மணச்சநல்லூர் பகுதியில் நடைபெற்றது.



