திண்டுக்கல், மே 14 –
திண்டுக்கல் கலை பண்பாட்டு துறை, திண்டுக்கல் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் மற்றும் மதுரை மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில் கடந்த பத்து நான்கு நாட்களாக காந்திஜி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கோடைகால கலை பயிற்சி முகாம் நிறைவு பெற்றது.
நிறைவு விழாவில் மதுரை மண்டல கலை பண்பாட்டு துறை உதவி இயக்குநர் ரேவதி, திண்டுக்கல் மாவட்ட திட்ட அலுவலர் ரமணி மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர். பயிற்றுநர்கள் மோகன் (சிலம்பம்), நாகராஜன் (ஜிம்னாஸ்டிக் மற்றும் மல்லர் கம்பம்), விஜயராஜ் (நாட்டுப்புற நடனம்) மற்றும் காளீஸ்வரி (ஓவியம்) ஆகியோர் மாணவர்களை பயிற்றுவித்தனர்.
கலந்து கொண்ட மாணவர்களுக்கு கோடைகால கலை பயிற்சி முகாமில் சிலம்பம், ஜிம்னாஸ்டிக் மற்றும் மல்லர் கம்பம், நாட்டுப்புற நடனம் மற்றும் ஓவியம் போன்ற நான்கு கலைகள் எந்த கட்டணமின்றி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டன.
இக்கோடை கால பயிற்சி முகாமை மதுரை மாவட்டம் மையம், விரிவாக்க மையம், ஊரக மையம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மண்டல கலை பண்பாட்டு மையமாக விளங்கும் மதுரை கலை பண்பாட்டு துறை ஒவ்வொரு வருட கோடை கால விடுமுறையிலும் குழந்தைகளுக்கு சிறப்பாக நடத்தி வருகின்றனர். இம்முறை 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயிற்சி பெற்று, சான்றிதழ்களையும் பெற்றனர்.



