குளச்சல், ஆக. 16 –
மணவாளக்குறிச்சி தேவி நன்னெறி மன்றத்தின் 68-ம் ஆண்டு சந்தனகுடம் பவனி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு நேற்று புறப்பட்டு சென்றது. மணவாளக்குறிச்சி இருந்து புறப்பட்ட பவனி பிள்ளையார் கோவில், பரப்பற்று, கூட்டுமங்கலம் வழியாக மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றது. அங்கு மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சந்தன காப்பு, 6.30 மணிக்கு சாயரட்சை, தீபாராதனை, 8 மணிக்கு அலங்கார சிறப்பு தீபாராதனை ஆகியவை நடந்தது.



