தஞ்சாவூர், ஜூலை 21 –
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 688 மனுக்களை பொது மக்கள் கலெக்டரிடம் வழங்கினர். இந்த மனுக்களை பெற்றுக் கொண் ட சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்தார்.
அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தேசிய அறக்கட்டளை சட்டம் 1999ன் கீழ் 5 மாற்றுதிறனாளிகளுக்கு பாதுகாவலர் நியமன சான்றிதழ் வழங்கினார். மேலும் அவர் அய்யம் பேட்டையில் உள்ள கிரசன்ட் மன வளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளி, மனவளர்ச்சி குன்றியோருக்கான பயிற்சி இல்லம் மற்றும் மனநல பாதிக்கப்பட்டோருக்கான இல்லத்தில் தங்கி உள்ள 50 மாற்று திறனாளிகளுக்கு போர்வைகளை வழங்கினர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சௌமியா, உதவி ஆணையர் (கலால்) ரேணுகாதேவி மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரகுமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



