திருப்பூர், ஜூன் 23 –
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் இடம் மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் மறைந்த அமைச்சர் கக்கனின் பேத்தியான ராஜேஸ்வரி நியமனம் செய்யப்பட்டார்.
தமிழகம் முழுவதும் 14 போலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். அவ்வகையில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றிய ராஜேந்திரன் மதுரை மாநகருக்கு மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதில் சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத் தடுப்பு பிரிவு ஐஜி ராஜேஸ்வரி திருப்பூர் போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார்.
ராஜேஸ்வரி தமிழகத்தில் நேர்மைக்கும் எளிமைக்கும் இலக்கணமாக இறுதிவரை வாழ்ந்து மறைந்த அமைச்சர் கக்கனின் பேத்தி அவர் மாநகர போலீஸ் கமிஷனர் ஆக இருந்த லட்சுமி இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதில் தற்போது இடம் மாற்றம் செய்யப்பட்ட ராஜேந்திரன் கமிஷனராக இருந்து வந்தார்.
அவர் வந்த போது முதலே ரோந்து பணிகளில் கவனம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு இது போன்ற பல விஷயங்களில் முழுமையான கவனம் செலுத்தி அதற்கான முயற்சிகளை செய்தார். குறிப்பாக பணியில் ஒழுங்கீனமாக இருக்கும் போலீசார் மீது தயங்காமல் நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.



