கோவை, ஜூன் 14 –
பொள்ளாச்சி கோவை ரோடு வடக்கு பாளையம் பிரிவு, டாக்டர் ஜெகதீசன் மெமோரியல் மைதானத்தில் குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் கண் கவர் வண்ணம் கடல் கன்னி பொருட்காட்சி துவங்கப்பட்டது. பொருட்காட்சியினை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி அவர்கள் மற்றும் திமுக தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக பொள்ளாச்சி நகராட்சி மன்றத் தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன், பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் மருதவேல், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், முன்னாள் ஆட்சி பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.என்.ரங்கநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கடல் கன்னி கண்காட்சி சிறப்பம்சங்கள் குறித்து மேலாளர் மனோஜ் அவர்கள் கூறியதாவது: இந்த கண்காட்சியில் 200 மீட்டர் நீளமுள்ள கடல் மீன்கள் கண்காட்சி ஏற்பாடு செய்துள்ளோம்; கண் கவர் வண்ணம் வெளிநாட்டு கடல்கன்னி சாகசங்கள் போன்ற சிறப்பம்சங்கள் உள்ளது. குழந்தைகளை மகிழ்விக்கும் வண்ணம் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உணவு ஸ்டால்கள் போன்றவை அமைந்துள்ளன எனக் கூறினார். மேலும் நிகழ்ச்சியில் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்காட்சியினைக் கண்டுகளித்தனர்.