மண்ணிவாக்கம், நவம்பர் 11 –
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பெரி கல்வி குழுமத்தின் சார்பில் நடைபெற்ற Peri Tech Expo 2025 எனப்படும் புத்தாக்க கண்டுபிடிப்பு கண்காட்சி நடைப்பெற்றது. இதில் பெரி கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மாண்பமைத் தலைவர் சரவணன் பெரியசாமி, தலைமைச் செயல் அலுவலர் சசி வீரராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக IIT Madras டீன் முனைவர் ஆர். சாரதி, ஓய்வு பெற்ற திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் கலியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளை பார்வையிட்டனர்.
பெரி டெக் எக்ஸ்போ கண்காட்சியில் 80 பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களுடைய அறிவியல் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் ஐந்து இடங்களைப் பிடித்த வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பெரி கல்வி குழுமம் சார்பில் பாராட்டுச் சான்றிதழ், பதக்கங்களும் ரொக்க பரிசும் வழங்கி கௌரவித்தார்.
பெரி பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆர். பால்சன் கென்னடி, அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. புருஷோத்தமன், பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியின் துணை முதல்வர் பி. மகேஷ் மற்றும் துறைத்தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



