அரியலூர்,மே:30
அரியலூர் மாவட்டம் அசாவீரன்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம்(59). இவர், துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஃபோர்மேனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஜீவானந்தத்துக்கு நேற்று முன்தினம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஜீவானந்தம் இறந்தது குறித்து அவரது குடும்பத்தினருக்கு நிறுவனத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வெளிநாட்டில் உயிரிழந்த தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவரது மனைவி ராணி(45)நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் மனு அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.


