மயிலாடுதுறை, ஜூன் 25 –
மயிலாடுதுறை காவிரி ஆற்றங்கரை தெருவில் ஹாஜியார் நகர் அமைந்துள்ளது. இங்கு தனியாருக்குச் சொந்தமான தக்வா பள்ளி வாசல் அமைந்துள்ளது. இந்த பள்ளிவாசல் தங்களது தாத்தா எங்களுக்குக் கொடுக்க வேண்டிய சொத்தில் ஒரு பங்காக பள்ளிவாசலுக்குத் தானமாக கொடுத்தார். ரோசியா பேகம் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளிவாசல் நிர்வாகி இலியாஸ் என்பவரிடம் வரவு செலவு கணக்கைக் கேட்டு உள்ளார். இது தொடர்பாக ரோசியா பேகம் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த உமர் பாரூக் ஆகியோர் கேட்கும் பொழுது இலியாஸ் என்பவர் அவரது ஆதரவாளர்களுடன் தகாத வார்த்தைகளால் திட்டியும் கட்டைகள் உள்ளிட்ட ஆயுதங்களால் ரோசியா பேகம் மற்றும் அவரது உறவினர் உமர் பாரூக் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் உமர் பாரூக் காயமடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது தொடர்பாக புகார் அளிக்க மயிலாடுதுறை காவல் நிலையம் சென்றால் காவலர்கள் புகாரை வாங்க மறுப்பதுடன் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் பெண்கள் தாங்கள் அச்சத்துடன் உயிருக்கு பயந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ரோசியா பேகம் குற்றம் சாட்டி உள்ளார். மூன்றாவது நாளாக நேற்று புகார் கொடுக்க வந்தவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.