புதுக்கடை, அக். 6 –
புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதி செம்பருத்தி குளம் என்ற இடத்தை சேர்ந்தவர் குமார் (50). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உண்டு. இவரது மனைவி சுமார் 9 வருடங்களுக்கு முன் குடும்பப் பிரச்சினை காரணமாக பிரிந்து சென்று விட்டார். இரண்டு மகன்களும் குமாருடன் வசித்து வந்தனர். இவரது மூத்த மகன் அஜின் (17). இவர் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு ஒரு கம்பெனியில் சேல்ஸ்மேன் வேலை செய்து வந்தார்.
சம்பவத்தினம் வேலைக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதை அடுத்து குமார் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புதுக்கடை காவல் ஆய்வாளர் மாரியப்பன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுவனை தேடி வருகிறார்.


