புதுக்கடை, மார்ச் 23 –
புதுக்கடை அருகே உள்ள முஞ்சிறை பகுதியில் சிந்துகுமார் என்ற வேன் டிரைவர் வாடகை வீட்டில் குடும்பமாக வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் தினேஷ் (40). மது போதையில் தினேஷ் தகராறு செய்ததை சிந்துகுமார் தட்டி கேட்டதால், இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவ தினம் தினேஷ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (42) ஆகியோர் சேர்ந்து சிந்துகுமாரின் வீட்டின் முன் சென்று தகராறு செய்துள்ளனர். தகராறு செய்து, வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த வேனின் பக்கவாட்டு கண்ணாடிகளை கல்கொண்டு உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதன் சேத மதிப்பு ரூ. 5 ஆயிரம் ஆகும்.
மேலும் சிந்துகுமார் மற்றும் அவரது மனைவிக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து சிந்துகுமார் புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். புகார் போலீசார் சம்பந்தப்பட்ட தினேஷ், சுரேஷ் ஆகிய இருவரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


