கன்னியாகுமரி, ஜன. 30 –
தமிழக அரசின் நிதிநல்கையுடன் அஞ்சுகிராமம் அருகே பால் குளத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைஞர் தமிழ் மன்றம் சார்பில் பேச்சு, கட்டுரை, கவிதை ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.
தொடக்க விழாவுக்குக் கல்லூரி முதல்வர் முனைவர் கா. சரோஜா தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சா. அமுதன் முன்னிலை உரை ஆற்றினார். முனைவர் ஹேம்லின் ஐடா வரவேற்புரை நிகழ்த்தினார். முனைவர் கவின் நன்றி கூறினார்.
செல்வி ஆரோக்கிய ரேன்சம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். முப்பெரும் போட்டிகளில் மொத்தம் 110 மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக 5000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 3000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 2000 ரூபாயும் வழங்கப்பட்டன.



