புதுக்கடை, ஆக. 18 –
புதுக்கடை அருகே பாலக்காவிளையில் பிரண்ட்ஸ் இளைஞர் நற்பணி இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் 25-வது ஆண்டு விழா, சுதந்திர தின விழா மற்றும் இலவச மருத்துவ பொது மருத்துவ முகாம் போன்றவை நேற்று நடைபெற்றது. முதலாம் நாளான 15-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை தேசியக்கொடி ஏற்றுதல் நடைபெற்றது. இயக்கத் தலைவர் சசி கொடியேற்றினார். தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
பிற்பகல் ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி,ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் பாட்டு போட்டிகள் போன்றவை நடைபெற்றன. இரண்டாவது நாளாக நேற்று ஞாயிற்று கிழமை இயக்கத்தின் 25 – ம் ஆண்டு முன்னிட்டு காலை 10 மணி முதல் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. பாலக்கா விளை ஸ்ரீ கிருஷ்ணா சமூக நலக் கூடத்தில் நடந்த இந்த மருத்துவ முகாமில் சுங்கான் கடை புனித சவேரியார் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி தி ஐ பவுண்டேஷன் மருத்துவர்கள் பங்கேற்றனர்.
முகாமில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளம் பேர் பங்கேற்றனர். மாலையில் வெள்ளி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இயக்க உறுப்பினர் ஜஸ்டின் ஜவகர் தலைமை வகித்தார். வழக்கறிஞர் கவிஞருமான டயானா கிறிஷ்டி சிறப்புரையாற்றினார். சுகுமாரன், சசி, ஆல்வின், ஸ்ரீதர், அஜிசிங் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். முடிவில் வெள்ளிக்கிழமை நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



