திருப்பூர், செப்டம்பர் 30 –
வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் அவர்களால் தொடங்கப்பட்ட நூற்றாண்டு கண்ட மாபெரும் கட்சியான அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியில் திருப்பூர் மாவட்ட பொருளாளர் நெல்லை சுறா பாண்டி தேவர் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களின் தாய் கழகமான அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் இணைத்துக் கொண்டனர். விழாவிற்கு மாநகர் மாவட்ட செயலாளர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் க. மகேஷ் குமார் தேவர் அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட அமைப்பு செயலாளர் காளீஸ்வரன் தேவர், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரபாகரன் தேவர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அஜித் தேவன், திருப்பூர் மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் யோகேஷ் தேவர், திருப்பூர் மாவட்ட தொழிற்சங்க இணை செயலாளர் பிரகாஷ ராஜ்தேவர், திருப்பூர் மாவட்ட தொழிற்சங்க துணை தலைவர் நல்லகண்ணு தேவர், திருப்பூர் மாவட்டம் மாணவரணி துணை செயலாளர் வல்லரசு தேவன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இணைப்பு விழா முன்னதாக தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாக வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர், தமிழக முன்னாள் சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினருமான கல்வித் தந்தை மூக்கியா தேவர் ஆகியோரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



