வேலூர், செப். 17 –
வேலூர் மாநகர் மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பகுதி கழக செயலாளர் சோமு அவர்கள் ஏற்பாட்டில் முன்னாள் துணை மேயர் தர்மலிங்கம் அவர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார். உடன் ராஜா, கமலநாதன், குமார், சதீஷ்குமார், சுந்தரமூர்த்தி, கலையரசன், சந்தர் கணேஷ், சக்திவேல், செந்தில்குமார், விநாயகம், சரவணன், ரவி, விஜய பாஸ்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



