பரமக்குடி, ஜூன் 26 –
டாக்டர் கலைஞரின் 102 வது பிறந்த நாள் விழா மற்றும் திராவிட மாடல் அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் பரமக்குடி தெற்கு நகர் இளைஞரணி சார்பில் ஜூன் 26 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு நகர் இளைஞரணி அமைப்பாளர் துரைமுருகன் தலைமை தாங்கினார்.
பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சண்.சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தெற்கு நகர் இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணீஸ் குமார் வரவேற்றார்.
பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், முன்னாள் அமைச்சர் சுந்தரராஜன், மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா, பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.எம்.டி. அருளானந்த், பூமிநாதன், போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் மோகநிதி கலைஞர் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் கட்சியின் வளர்ச்சி, மு.க. ஸ்டாலின் அவர்களின் 4 ஆண்டு சாதனைகள் குறித்து பேசினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் தெற்கு நகர் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் வினோத் கண்ணன், தினேஷ், தர்மராஜா, பாலமுருகன், ஜாபர் அலிகான், சதீஷ்குமார், மாவட்ட பிரதிநிதி கார்த்திக் பாண்டியன், மாவட்ட ஒன்றிய, நகர, கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணியினர் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் நகர் இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.