By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: படப்பையில் நடைபெற்ற மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு பரப்புரைத் திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > படப்பையில் நடைபெற்ற மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு பரப்புரைத் திட்டம்
சென்னைதமிழ்நாடுமருத்துவம்

படப்பையில் நடைபெற்ற மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு பரப்புரைத் திட்டம்

Last updated: November 4, 2025 5:49 pm
November 4, 2025
14 Views
Share
SHARE

சென்னை, நவ. 04 –

பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோயை அதன் அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கிய ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதையும் மற்றும் அப்பாதிப்பு வராமல் முன்தடுப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக ” இந்தியா டர்ன்ஸ் பிங்க் ” என்ற அமைப்பின் ஆதரவோடு, படப்பையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு திட்டத்தை குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் சிறப்பாக நடத்தியது.

நடை பயண பேரணி மற்றும் கையெழுத்து சேகரிப்பு பரப்புரையும் இதன் ஒரு அங்கமாக இடம்பெற்றன. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஐஏஎஸ், இந்நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தார். “இந்தியா டர்ன்ஸ் பிங்க் ” அமைப்பின் நிறுவனரும், தலைவருமான பி.ஏ.ஆனந்த குமார் மற்றும் நவீன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்ஷீர் வசுதா குமார் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக இதில் கலந்து கொண்டனர்.

தலைமை விருந்தினரான காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஐஏஎஸ், இந்நிகழ்ச்சியில் பேசுகையில்: “தொழில்நுட்பமானது சமீப காலத்தில் பல துறைகளிலும் பல்வேறு விதங்களில் பெரும் முன்னேற்றம் கண்டிருக்கிறது. முன்பெல்லாம் புற்றுநோயை கண்டறிவதற்கான பரிசோதனைகள் அதிக கடினமானதாக மற்றும் அதிக நேரம் எடுப்பதாக இருந்தன. இன்றைய காலகட்டத்தில் நவீன நோயறிதல் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதால், முன்னதாகவே அவற்றை அடையாளம் காண்பது மிக எளிதானதாக மாறியிருக்கிறது. புற்றுநோயின் நிலை 1 அல்லது நிலை 2 என்ற நிலையிலேயே கண்டறியப்படுமானால், அதை சிகிச்சையின் மூலம் அதை முற்றிலும் குணப்படுத்த முடியும். எனவே, இது குறித்த விழிப்புணர்வைப் பெற்று ஆரம்ப நிலையிலேயே நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை பெறும் நடவடிக்கைகளை தவறாமல் மேற்கொள்ள வேண்டுமென்று ஒவ்வொருவரையும் நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்.

நவீன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஷீர் வசுதா குமார் இந்நிகழ்வில் கூறியது: இன்றைய நவீன யுகத்தில் மற்றும் தற்போதைய தலைமுறையினர் மத்தியில் மார்பக புற்றுநோய்க்கு ஆரம்ப நிலையிலேயே ஸ்க்ரீனிங் சோதனைகளை செய்து கொள்வது ஒரு இயல்பான மற்றும் அத்தியாவசியமான சுகாதார நடைமுறையாக கருதப்பட வேண்டும். இது பற்றி நாம் அனைத்து நிலைகளிலும் பரவலாகப் பேசும்போது, பொதுமக்கள் மத்தியில் அது குறித்த விழிப்புணர்வை நாம் அதிக அளவில் உருவாக்க முடியும்.

இந்தியா டர்ன்ஸ் பிங்க், இத்தகைய சிறப்பான முன்னெடுப்புகள் சமுதாயத்தில் உண்மையான மாற்றத்தை உருவாக்குகின்றன. ஒவ்வொரு பெண்ணும் தனது ஆரோக்கியம் மீது அக்கறை காட்ட வேண்டும் என்ற உத்வேகத்தை இந்நிகழ்ச்சி ஏற்படுத்துகின்றன.” என்றார் மேலும் இந்நிகழ்ச்சியில் பொது மக்களும், அதிகாரிகளும், தன்னார்வலர்களும் இணைந்து 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இரு சக்கர வாகன எக்ஸ்சேஞ்ச் மற்றும் கடன்
குமரி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது
திமுக ஆட்சியில் பாலியல் குற்றங்களுக்கு பெண்கள் புகார் தருகின்றனர்; அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி
மகளிர் உரிமைத்தொகை வழங்கும் பணி; அமைச்சர் துவக்கி வைத்தார்
2 ஆம் கட்டம் தொடக்கவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

கே.ஆர்.பி. அணையின் 68-வது ஆண்டு துவக்க விழா

November 11, 2024
33 Views
நாம் தமிழர் கட்சி மரிய ஜெனிபர் கண்டனம்
அரசு மறுவாழ்வு இல்லத்தில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு
மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நீர்மோர் பந்தல் திறப்பு.
மகளிர் உரிமைத்துறை சார்பாக “புதுமைப் பெண்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account