சென்னை, ஜூன் 25 –
இந்தியாவின் முன்னணி குழந்தைகள் பொழுதுபோக்கு சேனல்களான நிக்
மற்றும் சோனிக் நாட்டின் மிகப்பெரிய யோகா தின கொண்டாட்டத்தை விசாகப்பட்டினத்தில் நடத்தியது.
விசாகப்பட்டினம் ஆர்.கே. கடற்கரை காளிகா மாதா கோயில் அருகில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆயூஷ் அமைச்சகத்துடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். மேலும் மத்திய அமைச்சர்கள், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன்கல்யாண், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு மற்றும் 3 லட்சத்திற்கும் அதிகமான யோகா ஆர்வலர்கள், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரமதர் மோடி இந்நிகழ்வில் பேசியதாவது: நிக் மற்றும் சோனிக் சிறுவர் கேளிக்கை சேனல்கள் குழந்தைகளின் அறிவுத்திறன் மட்டுமல்லாது உடல் நலத்தையும் பேணும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகளை சேனல்களில் ஒளிபரப்பி வருவது பாராட்டும் படியாக உள்ளது. மேலும் யோகா தினத்தில் இதுபோல் ஒரு நிகழ்ச்சி நம் நாட்டின் கலாச்சாரத்தில் பிணைந்திருப்பதை உலகுக்கே எடுத்துரைப்பது போல் உள்ளது. உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை யோகா தினத்தின் பெருமை என்றார்.