நாகர்கோவில், நவம்பர் 03 –
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், செட்டிகுளம் சந்திப்பில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு கட்சி தீர்மான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஐயப்பன் தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் தீர்மானமாக நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசிக்கக்கூடிய வீட்டுமனை இல்லாத பொதுமக்களை சந்தித்து தமிழக அரசாங்கத்தை வலியுறுத்தி வீட்டு மனை கேட்டு மனு கொடுப்பது மேலும் கட்சி மாநாடு நடத்துவது தொடர்பாகவும் மற்றும் வடகிழக்கு பருவ மழையால் குண்டும் குழியும் உள்ள நாகர்கோவில் மாநகராட்சி சாலைகளை செப்பனிட கேட்டு தீர்மான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தோழர்கள் சியாமிளா, செல்வி, அருமை தங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



