நாகர்கோவில், மே 10,
கன்னியாகுமரி கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் பி.எஸ்.என்.எல் சிம் கார்டு விற்பனை வசதி, ரீசார்ஜ் வசதி மற்றும் மொபைல் எண் மாறாத வண்ணம் வேறு எந்த ஒரு நெட்வொர்க்கில் இருந்தும் பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கிற்க்கு மாற்றிக் கொள்ளும் வசதி ஆகியவை 7ஆம் தேதி முதல் செயல்பட துவங்கி உள்ளது.
இதற்கான அறிமுக விழா நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் வைத்து 7-ம் மாலை தலைமை தபால் நிலைய அதிகாரி எஸ். சுரேஷ் தலைமையில் பி.எஸ்.என்.எல் உதவி பொது மேலாளர் துஷாரா பாபு முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் பெருவாரியான தபால் துறை மற்றும் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் அனைவரும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.



