நாகர்கோவில், ஜன. 24 –
நாகர்கோவில் வெள்ளடிச்சிவிளை பகுதி சேர்ந்தவர் அப்துல் காதர் நிசாம் (37). தற்போது பறக்கை பகுதியில் வசித்து வந்தார். இவர் மீது கொலை வழக்குகள் உள்ளிட்ட 3 வழக்குகள் உள்ளன. கோட்டார் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலிலும் அப்துல் காதர் நிசாம் பெயர் உள்ளது.
இவருக்கு அதிகமாக மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. வலிப்பு நோயும் வரும் என கூறப்படுகிறது. நேற்றுஇரவு குடிபோதையில் வீட்டில் சென்றுள்ளார். இரவில் அவரை சாப்பிட அழைக்க தாயார் சென்றபோது அப்துல் காதர் நிசாம் படுக்கையில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்ததும் தாயார் ஆலறினார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் கோட்டார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடம் சென்று அப்துல் காதர் நிசாம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து அப்துல் காதர் நிசாம் உடல்நிலை பாதிப்பால் அவர் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு காரணங்கள் உண்டா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.


